வேலூர், ஜூலை 18- வேலுார் பேரணாம்பட்டு அருகே மலைப் பாதையில் 200 அடி பள்ளத் தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் வி.கோட்டாவில் இருந்து புளிய மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டு மினி லாரி புறப்பட்டது. குடியாத்தத்தை சேர்ந்த சிவா (43), ஓட்டுனராகவும், மாற்று ஓட்டுனராக பரந்தாமன்(36) என்பவரும் இருந்தனர். வேலுார் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே தமிழக - ஆந்திர எல்லை யான பத்தலப்பல்லி அடுத்த குண்டத்து கானாறு என்ற இடத்தில் மலைப் பாதையில் லாரி வந்து கொண்டிருந்த போது, அங்குள்ள கொண்டை ஊசி வளைவிலுள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது ஓட்டுன ரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி இடதுபுறம் இருந்த தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு 200 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் ஓட்டுனர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.