ரஷ்யா உருவாக்கியுள்ள கொரோனாவிற்கான தடுப்பூசியை வாங்க வியட்நாம் பதிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை உள்ளூர், மாநில தொலைக்காட்சிகளில் அறிவித்துள்ளனர்.
உலகின் முதல் கொரோனா (Covid - 19) தடுப்பூசியை இரண்டு வாரங்களுக்குள் வெளியிடுவதாக ரஷ்யா புதன்கிழமை கூறியிருந்தது.
வியட்நாம் 50-150 மில்லியன் டோஸ் தடுப்பூசிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது என்று டுவோய் ட்ரே செய்தித்தாள் தெரிவித்துள்ளது. சில தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து ஒரு "நன்கொடை" ஆக கொடுக்கலாம் எனவும், மீதமுள்ள தொகையை வியட்நாம் செலுத்துகிறது என அங்குள்ள தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி எப்போது கிடைக்கும், எவ்வளவு செலவாகும் என்று அமைச்சகம் கூறவில்லை. கடந்த மாதம், வியட்நாமில் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று அமைச்சகம் கூறியது.
கொரோனா சோதனைகள் மற்றும் கண்டறிந்தவர்களை தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் முந்தைய தொற்றுநோயை கட்டுப்படுத்தியதற்காக வியட்நாம் பாராட்டப்பட்டது. தற்போதும், பிரபலமான சுற்றுலா நகரமான டனாங்குடன் இணைக்கப்பட்ட பல இடங்களில் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக தீவிர சோதனைக்களில் ஈடுபட்டுள்ளது. அப்பகுதிகளில் கடந்த ஜூலை 25 அன்று புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டது.
வியட்நாமில் மொத்தம் 911 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகமான தொற்றுநோய்க்கான ஆபத்து மிக அதிகம் என்றும், அடுத்த சில நாட்கள் மிகவும் முக்கியமானவை என்றும் பிரதமர் நுயேன் ஜுவான் ஃபுக் தெரிவித்துள்ளார்.
வியட்நாமின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் தலைவர் வு டக் டம் வெள்ளிக்கிழமை, வியட்நாம் "வைரஸுடன் பாதுகாப்பாக வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார்.
நாங்கள் ஒரு ஏழை நாட்டில் வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறோம், எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் வைரஸிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.