ஹாங்காங், ஜூலை 2- போராட்டக்காரர்கள் ஹாங் காங் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து சூறையாடியதை “தீவிர வன்முறை செயல்” என ஹாங்காங் தலைவர் கேரி லேம் கண்டித்துள்ளார். ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபரை தைவான் மற்றும் சீனாவிடம் ஒப்ப டைக்கும் நடவடிக்கை தொடர் பான மசோதாவை அரசு கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் போராடி வருகிறார்கள். திங்கள் இரவு போ ராட்டக்காரர்கள் ஹாங்காங் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து ஒரு மணி நேரம் அதை ஆக்கிரமித்த னர். இதையடுத்து காவல்துறை யினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி அவர்களை வெளியேற்றினர். அதன் பின்னர், ஹாங்காங் தலைமை செயலதிகாரி கேரி லேம் செய்தியாளர்களை சந்தித்தார். “போராட்டக்காரர்கள் குறிப்பாக நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களின் செயல் கண்டிக்கப்படவேண்டியது. ஹாங் காங்கில் சட்டத்தின் ஆட்சியே அனைத்தையும் விட முக்கியமா னது” என கேரி லேம் கூறினார். பிரிட்டனின் நிர்வாகத்திலிருந்து சீனாவிடம் ஹாங்காங் ஒப்ப டைக்கப்பட்ட 22வது ஆண்டு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப் பட்டது. இந்த நிலையில், ஹாங்காங் அரசின் சமீபத்திய செயல்பாடுக ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போ ராட்டம் நடத்திய மக்கள் திங்கள் இரவு அதன் நாடாளுமன்ற அவை யின் வளாகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு அரசுக்கு எதிரான வாசகங்களை சுவர்களில் எழுதினர்.