கொரோனா நோய் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார்.
சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹானில் இருந்து கொரோனா பெருந்தொற்று பரவத்தொடங்கி அந்த வைரஸ், உலகம் முழுவதும் 199-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்குள்ளாவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அச்சத்தை அதிகப்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் 25 பேர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 30 ஆயிரத்து 883 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா பிரெஞ்ச் தலைநகர் பாரீஸில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்பெயினில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 235 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 982 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 12 ஆயிரத்து 285 அந்த நோயில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.