ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி உள்ளது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மீயா் கூறியதாவது:
தலைமையகத்தில் பணியாற்றி வரும் இருவருக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. அவா்களில் ஒருவருக்கு கடந்த வியாழக்கிழமையும், மற்றொருவருக்கு வெள்ளிக்கிழமையும் வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வீடுகளுக்குச் சென்று தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.
அலுவலகத்தில் பணியாற்றும் மற்றவா்களுக்கு தொடா்ந்து கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதன் பொருட்டு உலக நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை, உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது. இந்நிலையில் அந்த அமைப்பின் தலைமையகத்தில் இருவருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.