இந்திய அரசின் கீழ் செயல்படும் ஏர் இந்தியா விமான நிறுவனம் 5 நாடுகளுக்கான விமான சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. விமான சேவையுடன் இந்த நாடுகளில் ஏர் இந்தியா தனது அலுவலகங்களை மூடியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சேவையை விமானம் வழங்கி வருகிறது. இந்திய அரசின் கீழ் செயல்படும் ஏர் இந்தியா விமான நிறுவனம் 5 நாடுகளுக்கான விமான சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. விமான சேவையுடன் இந்த நாடுகளில் ஏர் இந்தியா தனது அலுவலகங்களை மூடியுள்ளது. கொரோனாவால் பரவும் நோய்த்தொற்றைக் கருத்தில் கொண்டு விமான நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.
தகவல்களின்படி, கோபன்ஹேகன் (Copenhagen), ஸ்டாக்ஹோம் (Stockholm), மிலன் (Milan), மாட்ரிட் (Madrid) மற்றும் வியன்னாவில் (Vienna) ஏர் இந்தியா நிலையங்களை மூடியுள்ளது.
இப்போது இந்த நாடுகளுக்கு விமான சேவை இல்லை, அதேபோல "வந்தே பாரத் மிஷன்" கீழ் எந்த விமானமும் இயங்காது. இந்த 5 நாடுகளிலிருந்தும் ஏர் இந்தியா தனது ஊழியர்களை திரும்ப அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நாட்களில் ஏர் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனா காலத்தில் பயணிகளின் கடுமையான பற்றாக்குறை காரணமாக, விமான நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. ஏர் இந்தியா தற்போது சுமார் 70 ஆயிரம் கோடி கடன்னைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.