செப்.9ல் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு
திருப்பூர், செப்.6- இந்து முன்னணியின் அராஜகம் மற்றும் அதனை கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையின் மெத்தனப் போக்கை கண்டித்து செப்.9 ஆம் தேதி யன்று திருப்பூர் மாநகராட்சி அலுவ லகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் சார்பில் அறி விக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் பங் கேற்ற கூட்டம் வெள்ளியன்று திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலக்குழு உறுப்பி னர் கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துகண்ணன், எம். ராஜகோபால், டி. ஜெயபால், பி. முருகேஷ், கே. பழனிச் சாமி, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் க. செல்வராஜ், ஈஸ்வரமூர்த்தி, ராமதாஸ், சிட்டி கணேசன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஈஸ்வரன், கதர் தங்கராசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்.ரவி, பி .ஆர். நடராஜன், சி.பழனிச்சாமி, மறும லர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத் தின் சிவபாலன், தந்தை பெரியார் திரா விட கழகம் சார்பில் முகில் ராஜ், முத்துக் குமார் மற்றும் திராவிட கழகம், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் நிர்வாகி கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு, திருப்பூர் மாநகரில் தொழில் மற்றும் வியாபார நிறுவனங் களில் இந்து முன்னணியினர் பலவந்த மாக வசூல் செய்து வருகின்றனர். இதன் உச்சமாக திருப்பூர் அருகே அங்கேரி பாளையத்தில் தனியார் ஆடை உற்பத்தி ஆலையில் இந்து முன்னணியின் ஒரு தரப்பினர் முன்பே பணம் வசூல் செய் துள்ளனர். இதன்பின்னர் மற்றொரு தரப்பினர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர் ஆனால், நிறுவன உரிமையாளர் பணம் கொடுக்க மறுத்ததன் காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது, சம்மந்தப்பட்ட ஆடை உற்பத்தி நிறுவ னத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த 60க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் இரும்புத்தடி ,கம்புகள், பிளாஸ்டிக் பைப்புகள், கற்கள் மூலம் நிறுவனத்தின் ஜன்னல் கண்ணாடிகள், பல்வேறு பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளர்.
மேலும், அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளிகள் உள்ளிட்டோரை நிறுவனத்தில் இருந்து வெளியே துரத்தி உள்ளனர். இதனால் அவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதன்பின்னர் இரும்புத் தடிகளை கொலை வெறியுடன் நிறுவ னத்தின் உரிமையாளர் மீது வீசி யுள்ளனர். அதுமட்டுமின்றி அங்கிருந்த தொழிலாளர்களையும் கண்மூடித்த னமாக தாக்கியதில் இரண்டு தொழி லாளர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். அதேநேரம், இந்த அராஜகத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை அங்கிருந்த காவல்துறையினர் தடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்து நீண்ட நேரத்திற்குப் பிறகு வந்த காவல் துறையினர் எந்த ஆய்வும் நடத்தாமல் நிறுவனத்தின் உரிமையாளரையே குற்றவாளி போல் காவல் நிலையத் திற்கு வருமாறு கூறி விட்டு சென்றுள் ளனர். எனவே, இந்த காவல்துறை யினரால் மக்களும், சட்டம் ஒழுங்கும் பாதுகாக்கப்படாது. மேலும் பொது மக்களின் உயிர் மற்றும் உடமைக்கும் பாதுகாப்பில்லை என்பதாலும், இந்து முன்னணியின் அராஜகப் போக் காலும் திருப்பூரின் தொழில் முடங் கிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் வேலை செய்யும் தொழி லாளர்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதாலும் இந்து முன்னணி அராஜக போக்கையும், காவல் துறையின் மெத்தனப் போக்கையும் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், இந்த வன்முறை வெறி யாட்ட அராஜத்திற்கு மூல காரணமாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பதை வலியுறுத்தி பந்த் உட்பட பல கட்ட மாக போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக செப்டம்பர் 9 தேதியன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு மாநகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த போராட்டத்தில் இந்து முன்னணியி னரின் வெறியாட்டத்தால் பாதிக்கப்பட் டவர்களும், மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்புகளும் பெருந்திரளாக கலந்த கொள்ள வேண்டுமென்றும் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.