tamilnadu

img

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி-க்கு, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 68 அரசு தரப்பு சாட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதன்படி, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புகார் அளிக்க சென்ற பெண் எல்.பி-யை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி.கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.