tamilnadu

img

வெற்றியை அறிவிக்கக் கோரி மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டம்

மதுரை, ஜன.11- மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றி யம் தெற்குத்தெரு ஊராட்சித் தலைவ ராக வாசுகி சக்ரவர்த்தி உட்பட 12 வார்டு உறுப்பினர்கள், நடைபெற்ற தேர்த லில் வெற்றிபெற்றனர். மறைமுகத் தேர்தல் மூலம் துணைத் தலைவர் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் பொறுப்பிற்கு பிரியா மணிமுத்து போட்டியிட்டார். 12 வார்டில் ஆறு வார்டு உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க வந்திருந்தனர். ஆறு வார்டு உறுப்பினர்கள் வரவில்லை. இதை யடுத்து பிரியா மணிமுத்து வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டுமென மண்ணெண்ணெய் கேனுடன் அவரு டைய ஆதரவாளர்கள் ஊராட்சி அலு வலகம் முன்பு திரண்டனர்.

;