tamilnadu

img

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 46 பேரிடம் ரூ.26 லட்சம் மோசடி

சென்னை, செப்.18 நுங்கம்பாக்கத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 46 பேரிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக பெண் ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல் பட்டு வந்த நிறுவனம் ஒன்று வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து  இருந்தது. இதை நம்பி பலர் அந்த நிறு வனத்தில் பணம் கட்டினர். இதுபோன்று 46  பேர் பணம் கட்டி ஏமாந்து உள்ளனர். ரூ.  26 லட்சம் வரையில் மோசடி செய்த அந்நிறு வனம் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி விட்டது. இதுபற்றி போலீசில் புகார் செய் யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் நிறுவனத்தின் ஊழியர் அருணாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது  தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர்க ளிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய் துள்ளனர்.