tamilnadu

img

வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரணம்: முதல்வர் வழங்கினார்

சென்னை, ஏப்.3- சென்னை ஆர்.ஏ. புரத்தில் வெளி மாநில தொழி லாளர்கள் தங்க வைக்கப்பட்  டுள்ள சமுதாய நல கூடத்தில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். முகாமில் தங்க வைக்கப் பட்டுள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கு செய்து  தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் முகாமில் தங்கி யுள்ள வெளிமாநில தொழி லாளர்களுக்கு உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவி களை முதலமைச்சர் எடப்  பாடி பழனிசாமி வழங்கி னார்.

அப்போது முதலமைச்ச ருடன் அமைச்சர்கள் ஜெயக்  குமார், எஸ்.பி. வேலுமணி மற்றும் சென்னை மாநக ராட்சி ஆணையர் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர், வேளச்சேரி, பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் வெளிமாநில தொழிலாளர் கள் தங்கி யுள்ள சமுதாய நல கூடங்களி லும் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி ஆய்வு செய்தார்.