விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சிவராமன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செய
லாளர் பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் ஆர்.டி. முருகன், பொருளாளர் பி.சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.