சேலம் ஏப்.9- கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் சென்னை சேலம் வேலூர் போன்ற மாநகரங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வழக்கம்போல் காய்கறி மளிகை உள்ளிட்ட பல்வேறு கடைகளிலும் கூட்டம் கூட்டமாக கூடி இருக்கிறார்கள். முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் அடிக்கடி அறிவித்து வரும் அறிவிப்புகளை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. பாதிப்பை முழுமை யாக உணராமல் சகஜமாக நடமாடி வரு கிறார்கள்.
எனவே, சேலத்தில் 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கடைகளுக்கு செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறை அறிவித்துள்ளது வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் பஜ்ஜி கடை நடத்தி வந்த 45 வயது நபர் எந்த வெளிநாடும், வெளி மாநிலமும் செல்லாத நிலையில் கொரோனா தொற்றில் உயிரிழந்தார். எனவே, 10 நாட்களுக்கு தேவையான மளிகை, 3 நாட்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி யும் மக்கள் அன்றாடம் காய்கறி, மளிகை வாங்க தொடந்து வந்த வண்ணம் உள்ள னர். ஆகவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஏப்ரல் 9ம் தேதி முதல் வேலூர் மாவட்டத்தில் மளிகை கடைகள், சூப்பர் மார்கெட், டிப்பார்மென்டல் ஸ்டோர்கள் ஆகியவை வாரத்தின் திங்கள், வியா ழன், ஞாயிற்றுகிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே இயங்கும்.
அதேபோல் காய்கறி கடைகள், பெட் ரோல் பங்குகள் நேரம் குறைக்கப்பட்டு தினசரி காலை 6 முதல் காலை 10.00 வரை இயங்கும். மருந்து கடைகள் வழக்கம் போல் இயங்கும். பால் தினசரி காலை 6 முதல் காலை 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் மாலை 7 மணி வரையும் இயங்கும். அதே சமயம், அனைத்து வகை இறைச்சி கடைகளும் ஊரடங்கு முடியும் வரை திறக்க தடை விதைக்கப்படுகிறது. பெட்டிகடைகள், தள்ளுவண்டி கடை கள், சிறிய கடைகள் என எதற்கும் விதி விலக்கு கிடையாது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்தி ருக்கிறார். இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே காய் கறி கடைகள் மளிகை கடைகள் மக்கள் வெளியில் வரவேண்டும் என்றும் அந்த மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.