tamilnadu

img

ஓசூரில் பரிதவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள்

ஓசூர், ஏப்.3- ஓசூரில் சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் பரிதவிக்கும் வெளி மாநிலத் ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களுக்கு உணவும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் 1,2, சிட்கோ, அசோக் லேலண்டு, டிவிஎஸ், குழுமங்கள், ராஜ்ஸ்ரீயா லால், கேட்டர் பில்லர் , பூணப்பள்ளி, பாகலூர், தேன்கனிக் கோட்டை, கலுகொண்டப் பள்ளி, பகுதியில் ஹரிதா, ஆவ் டெக், ஹெச்எம்எல், கேட்டர் பில்லர், குழுமங்கள் ஆகிய பெரு நிறுவனங்கள், கிரானைட் தொழிற் கூடங் கள்  என ஆயிரக்கணக்கில் தொழிற்சாலைகள் உள்ளன.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இவற்றில் நிரந்தர தொழிலாளர்கள் 90 சதமாகவும், நிரந்தரமற்ற ஒப்பந்த தொழிலாளர்கள் 10 சதத்திற்கும் குறைவான வர்களாகவும் இருந்தனர். இந் நிலையில், வட மாநில தொழிலாளர்களை மிகக் குறைந்த கூலிக்கு பல ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தினர். உலகமயம், கட்டுப்பாடு களற்ற தனியார் மயம், ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு குறைந்தபட்ச சட்டக் கூலி, நிரந்தரம், பிஎப்ஃ, இஎஸ்ஐ, நிரந்தர சம்பளம் என எதுவும் இல்லை. இதனால், ஒப்பந்த தொழி லாளர்கள்  75 சதமாகவும் நிரந்தர தொழிலாளர்கள் 25 சதம் என தலைக் கீழாக நிலைமை மாறியது.

தினக் கூலி 200, 250 ரூபாய்க்கு 12 முதல்16 மணி நேரத்திற்கு வேலை வாங்குகிறார்கள். இந்த பணியில் 18 முதல் 30 வயதிற்குட்பட்ட  ஜார்கண்ட், திரிபுரா, மேற்கு வங்கம், அசாம், குஜராத்,பிகார், இன்னும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஓசூர் சுற்று வட்டாரத்தில்10 ஆயிரத்திற் கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களில் 75 சதத்திற்கும் மேற்பட்டவர்கள் மனைவி, குழந்தைகளை சொந்த மாநிலங்களில், ஊர்களில் விட்டு விட்டு தனியாகவே இங்கு  உள்ளனர். வசதிகள் ஏதுமற்றற்ற சிறு சிறு அறைகளில் 8,10 பேர்கள் என தங்கியுள்ளனர். மாதக் கூலி 5 நாள் தள்ளிப் போகும் போது சாப்பாட் டுக்கு திண்டாடி வந்தனர்.

இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் ஓசூர் சுற்று வட்டாரத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி மாநில ஒப்பந்த தொழிலாளர்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஓசூர் பகுதியில் வேலை செய்யும் திரிபுரா, மேற்கு வங்கத்தை சேர்ந்த சில தொழிலாளர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தமிழகத் நிர்வாகிகள் ரெஜிஸ், போஸ் ஆகியோரை தொடர்பு கொண்டு இந்த நிலையை எடுத்துரைத்துள்ளனர்.

சிபிஎம் தலையீடு..

இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன் தலைமையில், ஓசூர் ஒன்றியச் செயலாளர் பிஜி .மூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் பீட்டர், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், தலைவர் ஸ்ரீதர், வட்டச் செயலாளர் நாகேஷ்பாபு, கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி, எம்.எம்.ராஜூ உள்ளிட்டோர் ஜூஜூவாடி, மாருதி நகர், அரசனட்டி, காந்தி நகர், பல்லூரு, பேகேபள்ளி, பேடரப்பள்ளி, மூக்கண்டப் பள்ளி பகுதிகளில் தங்கியிருந்த  திரிபுரா, மேற்கு வங்கம், ஒடிசா, பீகார் மாநிலங்களைச் சார்ந்த கூலித் தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டவர்களை சந்தித்தனர். பிறகு,வாலிபர் சங்கம் சார்பாக சேகரிக்கப்பட்ட 150 கிலோ அரிசியை உடனடியாக வழங்கினர்.

பின்னர், ஓசூர் சாராட்சியர் வட்டாட்சியர், மாநகராட்சி ஆணையரை சந்தித்தனர். அப்போது, ஓசூர் பகுதியில் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை களும், ஒப்பபந்ததாரர்களும் உடனடியாக கூலி பாக்கியை வழங்க நடவடி க்கை எடுக்க வேண்டும். உதவித் தொகை வழங்க வேண்டும். பாதுகாப்பில் லாமல் கூட்டம் கூட்டமாக இருக்கும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு நிவாரணம், உணவுப் பொருள்கள், முகக் கவசம், வழங்க வேண்டும், மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அதிகாரி களும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.