கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி வட்டத்திலும், சந்தூர் சுற்றி லும் சுமார் 5,000 ஏக்கர் நிலப்பரப் பில் கொய்யா, மற்றும் அதன் ஒட்டுச் கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. 100க்கும் மேற்பபட்ட நர்சரிகள், 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில், ஈடுபட்டுள்ளனர். இந்த கன்று வளர்ப்பிற்கு 3 மாதங்கள் தேவைப்படுகிறது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் இதன் மூலம் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஆண்டுக்கு 50 லட்ச ரூபாய் வரை கொய்யா, ஒட்டு கன்றுகள் வளர்க்கப்பட்டு தமிழகத்தின் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச் சேரி, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்க ளுக்கும் அனுப்பப்படுகிறது.
போச்சம்பள்ளிவட்டம், சந்தூர், மத் தூர் பகுதி கொய்யா தமிழகத்தில் பிரசித்தி பெற்றதாகும். 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசின் தோட்டக்கலைத் துறையே விவசாயிகளிடமும், நர்சரிகளிடமும் அதிக அளவில் கொள் முதல் செய்து வந்தது. அதனால் விலை சிறிது குறைவாய் இருந் தாலும் தயாராகும் ஒட்டுச் செடிகள் அனைத்தும் விற்பனையாகி விடும். இத னால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படா மல் இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக தோட்டக்கலைத் துறை கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்ட நிலையில், கடந்த 4 மாத கொரோனா தொற்று பொது முடக்கம் காரணமாகவும், பூச்சி மருந்து, உரம் ஆகியவற்றின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாலும், சந்தூர், மத்தூர், போச்சம்பள்ளி ஏரிகளில் போதுமான நீர் இல்லாததாலும் கொய்யா விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பல லட்சம் ஒட்டுச் செடிகள், கொய்யா காய், பழங்கள், ஏற்று மதியாகாமலும், விற்பனையாகாமலும் தேங்கியுள்ளது. இதனால் 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோயுள்ளது. எனவே அரசின் தோட்டக்கலைத் துறை கொய்யா விளைச்சலையும், ஒட்டுச் செடிகளையும் முன்பு போல நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும், விவசாயத்திற்கு தேவையான வண்டல் மண் ஏரி, குளங்க ளில் எடுத்துக் கொள்ள்ள அனுமதிக்க வேண்டும், பாம்பாறு அணை நீர்மூலம் ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், மானிய விலையில் பூச்சி மருந்து, உரம் வழங்க வேண்டும், தோட்டக்கலை விவசாயத்தில் பாதிப்ப டைந்துள்ள விவசாயிகள், மற்றும் நர்சரி உரிமையாளர்களுக்கும், வேலை இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்க ளுக்கும் தகுந்த இழப்பீடு வழங்க வேண் டும் என விவசாயிகளும், சமூக ஆர்வலர் களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஒய்.சந்திரன்