tamilnadu

img

கேஆர்பி அணையில் அதிக நீர் மட்டம் - மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கே.ஆர்.பி அணைக்கு 2 ஆயிரத்து 247 கன அடியாக நீர் வந்துகொண்டுள்ளது.அணையின் முழு கொள்ளளவான 52 அடியில் தற்போது நீர் இருப்பு 42.50 அடியாக உள்ளது. இந்நிலையில் வினாடிக்கு 1985 கன அடி நீர் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் அணையை ஒட்டிய பாலத்தை மூழ்கி தண்ணீர் செல்வதை அடுத்து அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
 

;