கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதுவரை பெய்தது கன மழை என்றால், இன்று மாலை அதி கன மழை பெய்து வெள்ளம் ஏற்பட இருப்பதாக மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய நீர் வள ஆணையம் வெளியிட்டு இருக்கும் தகவலில், ''குடகு மாவட்டடத்தில் நபொக்லு என்ற இடத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் மட்டத்தின் உயரம் அதிகரித்து வருகிறது. தற்போது 0.6 எம் என்ற உச்சபட்ச அளவில் இருக்கிறது. பாகமந்தலா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை அதிகமாக பெய்து வருகிறது. உடனடியாக வெள்ளம் குறைவதற்கான வாய்ப்பு இல்லை. இன்று மாலை மிக கன மழை பெய்து பெரிய அளவில் குடகுவில் வெள்ளம் ஏற்படும்'' என்று எச்சரித்துள்ளது.