விவசாயிகள் சங்கம் நடத்துகிறது
சென்னை,மே 14- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் விவ சாயிகளின் சேவையைப் பாராட்டி போற்றும் நிகழ்ச்சி மே 16 ஆம் தேதி காலை நடை பெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா நோய்ப்பரவல் காரணமாக கடந்த ஐம்பது நாட்களுக்கு மேலாக நாடு முழு வதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப் பினும் நோயிலிருந்து மக்களை பாதுகாக்க மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் உழைத்துக்கொண்டுள்ளனர். இதே போல் பசியிலிருந்து மக்களை காக்க நாடு முழுவதும் உழவர்கள் ஓய்வின்றி உழை த்து மக்களுக்கு தேவையான உணவுப் பொருட் களை உற்பத்தி செய்து வழங்கிக் கொண்டுள் ளனர். பசிக்கு மாற்று உணவு மட்டும் தான். அதனால்தான் எதை நிறுத்தினாலும் விவ சாயத்தை நிறுத்த முடியாது என்று இவ்வ ளவு நெருக்கடியிலும் விவசாயிகள் தொடர்ந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.
மனித குலத்துக்கு மகத்தான சேவை யாற்றி வரும் உழவர் பெருமக்களை பாராட்டு வது சமூகத்தின் கடமை என்பதை சுட்டிக் காட்டுகிறோம். நாடு முழுவதும் போர்வீரர் களைப் போல் செயலாற்றி வரும் விவசாயி களை பாராட்டும் வகையில் மே மாதம் 16 ஆம் தேதி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறைகூவல் விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் பல்லாயிரக்கணக்கான கிராமங் களில் விவசாயிகளின் சேவையைப் பாராட்டி போற்றும் நிகழ்ச்சி மே 16 ஆம் தேதி காலை நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிகழ்வில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயிகளை கௌரவிப்பார்கள். இந்த நிகழ்ச்சி விவசாயிகளை மேலும் ஊக்க த்துடன் உற்பத்தியில் ஈடுபடுத்திக் கொள்ள அவர்களுக்கு உற்சாகமளிக்கும் நிகழ்வாக அமையும். உலகுக்கே உணவளிக்கும் உழ வர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.