அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலம் காவிரி பாசன பகுதியின் முதன்மையான வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையமாகும். தமிழகத்தில் இரண்டாவதாக துவங்கப்பட்டு 60 ஆண்டுகள் நீண்ட வரலாறு கொண்ட வேளாண் புலமாகும். இப்புலத்தின் முன்னாள் மாணவர்கள் பலர் சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி வரு கின்றனர். பல வேளாண் பல்க லைக்கழகங்களில் துணை வேந்தர்களாக வும், முக்கிய பொறுப்பு களிலும் சிறப்பாக செயல் பட்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (Indian Council for Agricultural Research) அங்கீகாரத்தை இப்பல்கலை கழக வேளாண் புலம் பெற்றுள்ளது. இளநிலை முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர். ஆனால் இவர்கள் நமது நாட்டில் உள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்கான வாய்ப்புகளை பெற்றுள்ளனர். மேலும் வெளிநாடுகளில் சென்று உயர் வேளாண் கல்விபெறும் வாய்ப்புகளும் இவர்களுக்கு கிடைக்கும். இத்தகைய சூழலில் கடந்த பல ஆண்டுகளாக அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலம் இந்திய வேளாண் கழக கருத்தின்படி தனது இளநிலை (வேளாண்மை) மற்றும் இளநிலை (தோட்டக்கலை) பயிலும் மாணவர்களுக்கு பாடப்பிரிவின் ஒரு பகுதியாக கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் (Rural Agricultural work experience programme) திட்டத்தை கிராமப்புறங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
செயல்பாடுகளும், சிறப்புகளும்
அண்ணாலைப் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பயிலும் இளநிலை (வேளாண்மை மற்றும் தோட்டகலை) மாணவர்கள் தங்களின் பாடப்பிரிவின் ஒரு பகுதியாக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் 45 நாட்களுக்கு தங்கி நேரடியாக விவசாயிகளின் வயல்களில், தோட்டங்களில் வேளாண் அனுபவம் பெறும் வகையில் இக்கல்வி முறை செயல்ப டுத்தப்படுகிறது. இக்கல்வியில் மாணவர்கள், விவசாயிகள் பின்பற்றி வரும் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், கிராமப்புற விவசாய சூழல், நடைமுறை பிரச்சனை பற்றி நேரடியாக கள அனுபவம் பெறுகின்றனர். மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வேளாண் மாணவர்கள் விவ சாயிகளின் தேவை மற்றும் நலன்களை கருத் தில் கொண்டு புதிதாக உருவாக்கிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்கின்றனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் பரிந்துரைக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை தொழில்நுட்பங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கும், கிராமப்புற பெண்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராமப்புற தொழில் முனைவோருக்கும் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றனர். இக்கல்வி முறை வாயிலாக மாணவர்கள் தங்களின் தலைமை பண்புகள் (Leadership Capabilities), தகவல் பரிமாற்ற திறமை (communication skills), குழுவாக செயல்படும் முறை (team work) போன்ற தகுதிகளுக்கு பயிற்சி பெறுகின்றனர். இந்த நேரடி கள பயிற்சிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல பேராசிரியர்களின் வழி காட்டுதல் மற்றும் துணையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இப்பயிற்சி வாயிலாக மாணவர்கள் எதிர்காலத்தில் வேளாண் மற்றும் பிற வளர்ச்சித்துறைகளில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், தனியார் வேளாண் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் சிறப்பாக பணி புரிய பெரிதும் உதவிகரமாக உள்ளது என்பதே நடைமுறை உண்மை. கடந்த 2019-20 கல்வி ஆண்டில் கிராமத்தில் தங்கி வேளாண் அறிவுரை நிலை பயிற்சி பெறும் திட்டத்தில் கடலூர் மாவட்டத்திலும் மற்றும் பிற காவிரி பாசன பகுதிகளில் புவனகிரி, கொள்ளிடம், கிராப்பாளையம், குமராட்சி, சீர்காழி, பரங்கிப்பேட்டை வட்டங்களில் உள்ள 60 கிராமங்களில் வேளாண் மாணவர்கள் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் வாயிலாக வேளாண் விரிவாக்க கள அனுபவம் பெற்றுள்ளனர். இம் மாணவர்களின் விரிவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிற்சிகள் மூலமாக பல ஆயிரம் வேளாண் பெருமக்கள் புதிய வேளாண் மற்றும் தோட்டக்கலை தொழில்நுட்பங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் இத்திட்டங்களின் பங்கு பெறுவதன் வாயிலாக பொருளாதார ஏற்றம் பெற்றுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இனி வரும் காலங்களிலும் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் வாயிலாக தொழில்நுட்பம் சார்ந்த கிராமப்புற முன்னேற்றம் பணிகளை மாணவர்கள் மற்றும் பிற வளர்ச்சி துறைகளின் பங்களிப்புடன் இணைந்து மேற்கொண்டு ஒரு இரண்டாம் பசுமைப்புரட்சி காவிரி பாசன பகுதிகளில் ஏற்பட அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலம் தனது தொடர் ஆராய்ச்சிகள் மற்றும் விரிவாக்கப் பணிகள் (Farm Research and Extension activities) வாயிலாக தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை. கட்டுரையாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலம் முதல்வர்