tamilnadu

img

பயிர்க் காப்பீட்டுத் தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம்

நாகப்பட்டினம், ஜூலை 18- நாகை மாவட்டம், கீழ் வேளூர் ஒன்றியப் பகுதி களில் விவசாயிகளுக்கு 2017-18 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை இதுவரை வழங்காததைக் கண்டித்தும், உடனடியாக காப்பீட்டுத் தொகையை வழங்குமாறும் கீழ்வேளூர் தொடக்க வேளாண் கூட்டு றவு வங்கி முன்பாக தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை முற் றுகைப் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு, விவ சாயிகள் சங்கத்தின் ஒன்றி யச் செயலாளர் எம்.செல்வ ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் சிறப்புரை யாற்றினார். சி.பி.எம். மாவ ட்டச் செயற்குழு உறுப்பி னர் ஜி.ஜெயராமன், கீழ் வேளூர் பொறுப்பு ஒன்றியச் செயலாளர் என்.எம்.அபு பக்கர், விவசாயத் தொழிலா ளர் சங்க ஒன்றியச் செயலா ளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப் பினர் எம்.சாந்தி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஏ. சிவகுமார், த.மு.எ.க.ச. ஒன்றி யச் செயலாளர் மோகன் இங்கர்சால் உள்பட திரளா னோர் போராட்டத்தில் பங் கேற்றனர்.