வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்க!
தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை,ஜூலை 29- தென்காசியில் வனத்துறையினரால் விவசாயி அடித்துக் கொலை செய்யப் பட்ட சம்பவத்தில் வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம், ஆழ்வார் குறிச்சி அருகில் உள்ள வாகைக்குளம் கிராமத்தை சார்ந்த விவசாயி முத்து என்பவரை கடந்த ஜூலை 22 அன்று இரவு விசாரணை என்கிற பெயரால் அடித்து சித்ரவதை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக் கிறது.
மந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாகைக்குளம் கிராமத்தில் வீட்டுக்கு அருகே உள்ள தனது தோட்டத்தில் மின் சார முள்வேலி அமைத்து இருந்ததாக வும், அதற்காக விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தற்போது பொய் யான குற்றச்சாட்டை சொல்லி வரு கின்றனர். விசாரணையின் போது அவ ருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்ததாக கூறி கொலை பாதகச் செயலை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர். அவரை அழைத்துச் செல்லும் போது அவரது உறவினர்களுக்கு தகவல் ஏதும் தெரி விக்கவில்லை. இரவு சுமார் 11.30 மணி அளவில் சிவசைலத்தில் உள்ள கடை யம் வனச்சரக அலுவலகத்தில் இருந்து விவசாயி முத்துவுக்கு உடல் நிலை சரி யில்லை என உறவினர்களுக்கு தகவல் வந்துள்ளது. உறவினர்கள் சென்று பார்த்த போது முத்துவின் உயிர் பிரிந் திருந்தது. அப்போதும் வனத்துறை யினர் மயக்க நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவரது மரணம் மருத்து வர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவரது மரணத்திற்கு காரணமான வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து சம்பந்த ப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். விவசாயி முத்து குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அவரது குடு ம்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.