tamilnadu

img

இலவச மின்சாரத்திற்கான போராட்டத்தில் உயிர்நீத்த விவசாய தியாகிகளுக்கு அஞ்சலி

திருப்பூர், ஜூன் 19- அவிநாசி அருகே பெருமாநல்லூரில் இல வச மின்சாரத்திற்காக போராட்டம் நடத்தி துப் பாக்கிச் சூட்டில் மரணமடைந்த விவசாயி களுக்கு வெள்ளியன்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட் டது.

இலவச மின்சாரத்திற்கான போராட்டத் தில் 1970 ஆம் ஆண்டு ஜுன் 19 ஆம் தேதி  நடை பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த பெருமா நல்லூர் தியாகிகள் ராமசாமி கவுண்டர், மாரப்ப கவுண்டர், ஆயிக் கவுண்டர் ஆகியவர் களின் ஐம்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளியன்று காலை 9 மணியளவில்  திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் (AIKS) சார்பில் அனுசரிக்கப்பட்டு, தியாகிகள் நினைவிடத் தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத் தப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயலாளர் செ.முத்துகண்ணன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், மாவட்ட நிர்வாகிகள் அவிநாசி எஸ்.வெங்கடாசலம், எஸ்.கே.கொளந்த சாமி, திருப்பூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.அப்புசாமி, பல்லடம் ஒன்றிய செயலா ளர் வை.பழனிசாமி, மார்க்சிஸ்ட் கட்சி வடக்கு  ஒன்றிய செயலாளர் கே.பழனிசாமி, அவி நாசி ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி உட்பட  பலர் கலந்து கொண்டனர்.