tamilnadu

img

விழுப்புரம்: கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 40க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 13-ஆம் தேதி திடீரென வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டு, புதுவை, மரக்காணம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, விழுப்புரம், கடலூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் 202 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 203 கள்ளச் சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்; 5901 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.