tamilnadu

img

விருதுநகரில் ஐந்து இடங்களில் காய்கறி விற்பனை

 விருதுநகர், மார்ச் 27- விருதுநகரில் பொது மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தடுக்க ஐந்து இடங்களில் காய்கறி விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனால், பொது மக்கள் சிரமமின்றி காய்கறிகளை வாங்கிச் சென்றனர். கொரானோ வைரஸ் தொற்று பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை விருதுநகர் மார்க்கெட் பகுதியில் ஏராளமான மக்கள், சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கக் குவிந்தனர். இதனால், காவல்துறையினர் அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவிட்டனர். இதையடுத்து, ஏ.எஸ்.பி சிவபிரசாத், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி ஆகியோருடன் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், ஒரே இடத்தில் காய்கறிகள் விற்பனை செய்வதை ஐந்து இடங்களில் விற்கலாம் என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் விருதுநகர் புதிய பேருந்து நிலையம், அஹமது நகர், ராமமூர்த்தி சாலை நகராட்சி மைதானம், கே.வி.எஸ்.மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. மக்கள் நெரிசலின்றி அகமது வாங்கிச் சென்றனர். மக்கள் தங்களுக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொள்ள நடமாடும் ஏ.டி.எம் வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.