விருதுநகர்:
கடை வீதிகளில் நடமாடும் பொது மக்கள் பண்டிகை காலம் முடியும் வரை முகக் கவசம் அணியாவிட்டால்அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை: பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் அதிகமாக மக்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. இதனால், கொரோனா வைரஸ் நோய் மற்றும் கொசு மூலம் பரவக்கூடிய தொற்று நோய்கள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. ஆகவே, பொது மக்கள் அதிக கவ
னத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக நவ.,1 முதல் பண்டிகை காலம் முடியும்வரை அனைவரும் ஜவுளிக்கடைகள் மற்றும் பண்
டிகை பொருட்கள் வாங்க கடைவீதி போன்ற பொதுஇடங்களுக்கு வரும் போது கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும். அத்துடன் சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும். மறுப்பவர்களுக்கு தகுந்த அபராதம் விதிக்கப்படும்.