தீபாவளி பண்டிகையை முன்னிட்டுசென்னை உள்நாட்டு விமானங் களில் பயண கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி, தூத்துக்குடி க்கு செல்ல ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
****************
சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.09 கோடி ரூபாய் மதிப்புடையை தங்கத்தை கலால் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
***************
வாகனங்கள், ஜவுளி, செல்போன் தயாரிப்பாளர் களை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்தித் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி சலுகைகள் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
***************
புதுவை மாநிலத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச துணிகளுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.