tamilnadu

பாஜக நினைப்பதை உச்சநீதிமன்றம் உத்தரவாக்குகிறது... மாணிக்கம் தாகூர் எம்.பி., பேட்டி

விருதுநகர்:
உச்ச நீதிமன்றம்  தனித் தன்மையுடன் தீர்ப்புகளை வழங்காமல் ஆளும் பாஜக அரசு நினைப்பதைஅப்படியே  உத்தரவாக்கி வருகிறது. இதனால் அதன் மீதான நம்பிக்கை குறையத் தொடங்கியுள்ளது என விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் கூறினார்.புதன்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கூறியதாவது :  

பி.எம்.கிசான் திட்டத்தில் மிகப் பெரிய ஊழல்தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. ஆளும் கட்சியினரின் துணையின்றி இவ்வளவு பெரிய ஊழலைசெய்திருக்க முடியாது. பாஜக வின் தலைமையகமான கமலாலயத்தில் உள்ளோரும் இந்த ஊழலுக்குதுணை போயிருப்பர்  என்ற ஐயம் எழுகிறது. இதுகுறித்து  உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில்சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.  விருதுநகர் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் எவ்வளவு ஊழல் நடைபெற்றுள்ளது என ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில்தெரியவரும். ஏழை, விவசாயிகளின் பணத்தை அள்ளிக் கொண்டு சென்றவர்கள். இந்த ஊழில் ஈடுபட்டவர்களை   தண்டிக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.  மக்களின் பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில்  டைரி தயாரிக்க கூடாது என மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நீட் தேர்வு பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின்மேல் இருக்கும்  நம்பிக்கை குறையத் தொடங்கியுள்ளது. மத்திய அரசு என்ன நினைக்கிறதோ அதைஆதரிக்கும் இடமாக நீதிமன்றம் இருக்கக் கூடாது. சட்டத்திற்கு புறம்பான   எந்த  விஷமாக இருந்தாலும் தைரியாக முடிவெடுக்கு இடத்தில் நீதிபதிகள் இருக்கவேண்டும். ஏழு மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் நீட் தேர்வை நடத்துவோம் எனமுடிவு எடுத்துள்ளனர். இது ஏழை,  ஏழை, மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதாகும்.தனியார் மயமாக்குதலை மட்டும் தனது கடமையாக பாஜக அரசு கொண்டுள்ளது. அம்பானிக்கும், அதானிக்கும் ரயில்வே, விமானநிலையம் ஆகியவற்றை வாரிக் கொடுக்கிறது. ரயில்வே திட்டங்களில்  தென் மாவட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்கவேண்டும்.

எந்த ஒரு மொழியை திணிப்பதும் இந்திய நாட்டின்ஒற்றுமைக்கு எதிராகத்தான் அமையும், தானாகமொழியைக் கற்பது என்பது வேறு. கட்டாயப்படுத்துவது என்பது வேறு.  இந்தி திணிப்பை காங்கிரஸ் கட்சிஏற்காது.நீட், ஜே.இ.இ. தேர்வுகள், பல்கலைக் கழகங்கள் திறப்பு உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் மாநிலக்கல்வி அமைச்சர்கள்,   கல்வியாளர்கள், மாணவர் சங்க  பிரதிநிதிகளிடம் கலந்து பேசி  முடிவு எடுக்க வேண்டும்.