tamilnadu

img

தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி போராட்டம்...

விருதுநகர்:
விருதுநகர், ரோசல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில்  தலித் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்குச் செல்லும் பாதையை மறித்து தனிநபர்சுவர் எழுப்பியுள்ளார். இதனால்,தலித் மக்கள் நீண்ட தூரம் சுற்றிதங்களது குடியிருப்புக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆனால், விதிமுறைகளுக்குப் புறம்பாக பாதைஉள்ள இடத்திற்கு தனி நபர் ஒருவருக்கு பட்டா வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தலித் மக்கள் அவ்வழியே செல்லக் கூடாது என்ற நோக்கத் தோடு, அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி தலித் மக்களுக்காகப் போராடிய தோழர் பி.சீனிவாசராவ் நினைவு நாளில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு டி.எட்வர்ட் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.முத்துக்குமார், மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், வீ.மாரியப்பன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் எம்.சி.பாண்டியன்,  எல்.முருகன், தெய்வானை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தலித் விடுதலை இயக்கம், ஆதித் தமிழர் கட்சி,ஆதித் தமிழர் பேரவை, தமிழ்ப் புலிகள் கட்சி, புரட்சி பாரதம், மாதர், வாலிபர், மாணவர்  அமைப்புகளின் நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளரிடம் மனு அளிக்கப் பட்டது. வரும் திங்கள்கிழமை அருப்புக்கோட்டை கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்திதீர்வு காண்பது என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.