tamilnadu

img

ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி வீட்டில் 19 பவுன் நகை கொள்ளை

விருதுநகர்:
விருதுநகரில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டின் உள்ளே சென்ற மர்ம நபர்கள் 19 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ளது பேராசிரியர் காலனி. இப்பகுதியைச் சேர்ந்த பாலு என்பவரது மகன் முருகவேல்(70). இவர், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில்  பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் திருமணமாகி சென்னையில் உள்ளார். 

இந்நிலையில், மகளைப் பார்க்க சென்னைக்கு தனது மனைவியுடன் கடந்த மார்ச் 19 ல் சென்றுள்ளார். வீட்டை தனது உறவினரான முருகேஸ்வரி என்பவரை பார்க்கச் சொல்லியுள்ளார். ஊரடங்கு உத்தரவால் விருதுநகருக்கு திரும்ப முடியவில்லையாம். முருகேஸ்வரி ஏப்.,22 அன்று வீட்டைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, வீட்டின் பின்பக்கம் இருந்த சிமிண்ட் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், முருகேவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விரைந்து வந்த முருகவேல், வீட்டின்  உள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 19 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது.  இதுகுறித்து முருகவேல் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
 

;