tamilnadu

img

பெட்ரோல், டீசல் 6-வது நாளாக விலை உயர்வு

சென்னை,ஜன.7- பெட்ரோல், டீசல் விலை  தொடர்ந்து 6-வது நாளாக உயர்ந்துள்ளது.  ஈரான் ராணுவத் தளபதியை படுகொலை செய்துள்ள அமெரிக்காவின் அராஜக நடவடிக்கையால்  கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது.இதனால்,  சர்வதேச சந்தையில் கச்சா  எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. இதனை காரணம் காட்டி இந்தியாவிலும்  6-வது நாளாக செவ்வாயன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறு வனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை 5 காசு அதிகரித்து , ஒரு லிட்டர் ரூ.78.69 ஆகவும், டீசல்  விலை 11 காசுகள் அதி கரித்து, ஒரு லிட்டர் ரூ.72.69 ஆகவும் உள்ளது. இந்த விலை செவ்வாயன்று காலை முதல் அமலுக்கு வந்தது.  பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர். 

;