விருதுநகர், ஜூலை 29- கொரோனா தமிழகத்தில் கட்டுக் குள் வந்திருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதனன்று கூறிய நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் செவ்வாயன்று 599 பேருக்கு கொரோனா தொற்றின் பாதிப்பு இருப்ப தும். தேனி மாவட்டத்தில் 133 பேருக்கும் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் உயிரோடு விளையாடுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் சென்னையை அடுத்து மதுரை உள்ளது மதுரைக்கு அடுத்த இடத்தில் விருதுநகர் உள்ளது. மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் இராஜபாளை யம் அரசு மருத்துவர், ஒரு டாஸ்மாக் ஊழி யர் உட்பட 599 பேருக்கு பாதிப்பு இருப் பது தெரியவந்துள்ளது.
குழப்பமும்... சட்டமன்ற உறுப்பினர்களும்...
திருவில்லிபுத்தூரில் வட்டாட்சியர், நகராட்சி அதிகாரிகள் இணைந்து திறக்கப்படும் கடைகளை அடைக்கச் சொல்லி தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். உணவகங்கள் திறக்க லாம் என தமிழக அரசு அறிவித்துள்ள உத்தரவையும் அதிகாரிகள் மீறுவதால், அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் மற்றும் நோயா ளிகளின் உதவியாளர்கள் உட்பட பலர் உணவின்றி தவிக்கும் நிலை திரு வில்லிபுத்தூர் பகுதியில் ஏற்பட்டுள்ளது. எப்படியாவது கடைகளை முழுமையாக அடைக்க வேண்டுமென வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாய்மொழி உத்த ரவு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எங்குமில்லாத நிர்வாகத்தை ஆட்சியர் இரா.கண்ணன் நடத்துகிறார் என்கின்ற னர் சமூக ஆர்வலர்கள். திருவில்லிபுத்தூ ரில் கொரோனா குழப்பம் தொடரும் நிலையில் அமைச்சர் என்ற முறையில் இராஜேந்திர பாலாஜியும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சந்திர பிரபாவும் தலையிடலாமே அவர் எங்கே சென்றார்? என்ன செய்கிறார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கொரோனா உயிர்களோடு விளையாடும் தேனி
தேனியில் வங்கி ஊழியர் உட்பட 133 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்தனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இயங்கி வரும் வங்கியில் பணிபுரியும் 43 வயது ஊழியர், சின்னமனனூர் காவ லர் குடியிருப்பில் வசிக்கும் உத்தம பாளையம் காவல்நிலைய தலைமைக் காவலர், ராயணதேவன்பட்டியில் அங் கன்வாடியில் பணிபுரியும் 41 வயது ஊழி யர் உட்பட 133 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,470 ஆக உயர்ந்துள்ளது.
நான்குபேர் பலி
தேனி அரசு மருத்துவமனையில் கடந்த 26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட தேனி அரண்மனைப்புதூர் முல்லை நகரைச் சேர்த்த நபர் செய்வாய்க்கிழமை உயிரிழந்தார். 27 ஆம் தேதி அனுமதிக் கப்பட்ட பெரியகுளம் கீழ வடகரை ஆர்எம்டிசி காலனியைச் சேர்ந்த 54 வயது பெண், கடந்த 11- ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட தேனி பங்கள மேட்டை சேர்ந்த வழக்கறிஞர்ஆகியோர் செய்வாய்க்கிழமை உயிரிழந்தனர். 27- ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட கூட லூரை சேர்ந்த 32 வயது பெண் புதன் கிழமை உயிரிழந்தார். தேனி அருகே கொடுவிலார்பட்டி யில் கடந்த 26-ஆம் தேதி 45 வயது நப ருக்கு கொரோனா உறுதி செய்யப்பட் டது. ஆனால் செவ்வாய்க்கிழமை வரை சுகாதாரத்துறையினர் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை. கழிப்பிட வசதி கூட இல்லாத நிலையில் குடும்பத் தடன் வசிக்கும் பாதிக்கப்பட்ட நபர் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த தால் மக்கள் பிடித்து ஊராட்சி அலுவல கம் அருகே அவரை தனிமைப்படுத்தி னர். பின்னர் காலதாமதமாக அவரை அழைத்துச் சென்றனர். அதே போல தேனி அரண்மனைப் புதூர் முல்லை நகரை சேர்ந்த 62 வயது பெண் கொரோனா அறி குறியுடன் அனுமதிக்கப்பட்டவர் பரி சோதனை முடிவு தெரியும் முன்பே இறந்து விட்டார். அவரது உறவினர்கள் சடங்குகள் செய்து அடக்கம் செய்தனர். அதன் பின் வந்த பரிசோதனை முடி வில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு காலதாமமாக முடிவு அறி விப்பதும், இறந்தவர் உடலை முடிவு தெரியாமல் உறவினர்களிடம் அளிப்ப தும் தொடர்கிறது கொரோனா கொடூ ரம் தெரிந்தும் மனித உயிரோடு சுகா தாரத் துறையும் ,மாவட்ட நிர்வாக மும் விளையாடிவருவது வேதனை யளிப்பதாய் உள்ளது.
மதுரை நிலவரம்
மதுரையில் புதனன்று 225 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோர் மொத்த உயிரிழப்பு 231 ஆக உள்ளது. புதனன்று ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்.