பிரதமர் நரேந்திர மோடி வெள்ளி யன்று காலை திடீரென லடாக் எல்லைப் பகுதிக்குச் சென்றார். அங்கு ராணுவத்தினர் வரவேற்பு அளித்தனர்.
முப்படைகளுக்கு ரூ.39 ஆயிரம் கோடிக்கு தளவாடங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித் துள்ளது.
கோவில்கள், சிறிய தேவா லயங்கள் மற்றும் சிறிய மசூதிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளை பின்பற்ற தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளுக்கான வகுப்புகள் வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் தொடங்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி அடுத்த ஆழி யாறு அணை, குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களில், வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள தேசிய நினைவிடங்கள் வரும் ஜூலை 6 ஆம் தேதி முதல் திறக்கப்பட இருப்ப தாக மத்திய கலாச்சார துறை அமைச்சர் பிரகலாத் படேல் அறிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்துள்ளவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் நிவாரண தொகை வழங்கப் பட்டு வருகிறது.
நெய்வேலி என்.எல்.சி. விபத்தில் பலியானோர் குடும்பத்தின ருக்கு, தலா ரூ.30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.