tamilnadu

img

விவசாயிகளை பாதிக்கும் சட்டங்கள் ரத்து கோரிக்கை... பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

விருதுநகர்
மத்தியில் ஆளும் பாஜக அரசு,விவசாயிகள் பயன்படுத்தி வரும்இலவச மின்சாரத்தை பறித்திட மின்சார சட்ட மசோதா 2020 ஐகொண்டு வந்துள்ளது. இந்தியவிவசாயத்தை கார்பரேட் கம் பெனிகளிடம் ஒப்படைக்கும் விதமாக அத்தியாவசிய பொருட்கள் அவசர திருத்த சட்டம், விதை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் -2020 ஆகியவற்றை கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு விரோதமான இச்சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக் கோரி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 12 ஆயிரம் கையெழுத்துக்கள் பெறப் பட்டன. அந்த கையெழுத்துக்கள் அனைத்தையும் பிரதமரிடம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர் தபால் நிலையம்முன்பு நடைபெற்ற இப்போராட் டத்திற்கு காளிராஜ், முத்தையாஆகியோர் தலைமையேற்றனர். இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் அ.விஜயமுருகன், மாவட்ட செயலாளர் வி.முருகன், மாவட்ட பொருளாளர் மனோஜ்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் சௌந்திரபாண்டியன், பழனிக்குமார், தமிழக விவசாயிகள் சங்கத்தின் ரெங்குதாஸ் உட்பட பலர் பங் கேற்றனர்.மத்தியில் ஆளும் பாஜக அரசு,விவசாயிகள் பயன்படுத்தி வரும்இலவச மின்சாரத்தை பறித்திட மின்சார சட்ட மசோதா 2020 ஐகொண்டு வந்துள்ளது. இந்தியவிவசாயத்தை கார்பரேட் கம் பெனிகளிடம் ஒப்படைக்கும் விதமாக அத்தியாவசிய பொருட்கள் அவசர திருத்த சட்டம், விதை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் -2020 ஆகியவற்றை கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு விரோதமான இச்சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக் கோரி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 12 ஆயிரம் கையெழுத்துக்கள் பெறப் பட்டன. அந்த கையெழுத்துக்கள் அனைத்தையும் பிரதமரிடம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர் தபால் நிலையம்முன்பு நடைபெற்ற இப்போராட் டத்திற்கு காளிராஜ், முத்தையாஆகியோர் தலைமையேற்றனர். இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் அ.விஜயமுருகன், மாவட்ட செயலாளர் வி.முருகன், மாவட்ட பொருளாளர் மனோஜ்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் சௌந்திரபாண்டியன், பழனிக்குமார், தமிழக விவசாயிகள் சங்கத்தின் ரெங்குதாஸ் உட்பட பலர் பங் கேற்றனர்.

;