tamilnadu

img

மருத்துவர் இல்லாமல் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழப்பு

விருதுநகரில் செவிலியர் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகரில் மஞ்சள் ஓடைப்பட்டியை சேர்ந்த முனீஸ்வரி என்பவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரை உறவினர்கள் அனுமதித்தனர். இந்நிலையில் மருத்துவர் இல்லாத நிலையில், செவிலியர்கள் பிரசவம் பார்த்தபோது, குழந்தை உயிரிழந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், சுகாதார நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் களைந்து சென்றனர்.