tamilnadu

img

விழுப்புரம் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், மே 13- விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ, கொடியவர்களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, செவ்வாயன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைஞாயிறில், வாலிபர் சங்க தலைஞாயிறு ஒன்றியம் சார்பில் சங்க ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.