tamilnadu

img

பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் தீண்டாமை வேலி

விழுப்புரம், ஜூலை 15- விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் அச்சரம்பட்டு ஊராட்சியில் ஆதியன் பழங்குடி இன மக்கள் (பூம் பூம் மாட்டுக்காரர்கள்) கடந்த  15 ஆண்டுகளாக சாலையோர புறம்போக்கு இடத்தில் வசித்து வருகின்றனர். அந்த மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு வீட்டு  மனை பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலை யில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்  முயற்சியால் அந்த மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கடந்த 2018ஆம் ஆண்டு வானூர் தாலுக்கா, திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் சர்வே.எண். 158/2.0 ல் 60 ஏர்ஸில் தலா 41 சதுர மீட்டர் அளவுள்ள வீட்டு மனைகளை வட்  டாட்சியர் வழங்கினார். அந்த இடத்தில் கடந்த  இரண்டு ஆண்டுகளாக அந்த கிராம மக்கள் வீடு  கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதே பகுதியை  சேர்ந்த ஆதிக்க சாதியினர் அந்த மக்கள் வீடு களில் இருந்து வெளியே வரமுடியாத வகையில்  பாதையில் கம்பி வேலி அமைத்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வட்டச் செயலாளர் ஜி.ராஜேந்திரன் தலை மையில், அந்த மக்கள் கம்பி வேலியை அகற்றி,  வேலி அமைத்த ஆதிக்க சக்திகள் மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானூர் வட்டாட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர்.