விழுப்புரம், ஜூன் 15- விழுப்புரம் மாவட்டம் மேல்மலைய னூர் ஒன்றியத்திற்குட்பட்ட அண்ண மங்கலம் கிராமத்தில் இயங்கும் ரூ. 8.50 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி அமைச்சர் சிவி.சண்முகம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஏழுமலை எம்.பி., மாவட்ட ஆட்சியர் சுப்பிர மணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அந்த அங்கன்வாடி மையம் இதுநாள் வரைக்கும் செயல்பாட்டிற்கு வராமல் மூடியே கிடக்கிறது. கடந்த ஆண்டு கட்டிடத்தை திறக்க அமைச்சர், எம்.பி. மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வர இருப்பதை யொட்டி சம்மந்தப்பட்ட அதிகாரிகள், கிராம மக்கள் ஆகியோர் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்து விட்டு நீண்ட நேரம் காத்திருந்த தாக் கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் வராத தால் அங்கிருந்த அரசு அதிகாரி ஒருவர் அங்குள்ள ஆளுங்கட்சிக்காரர்கள் மற்றும் பொமக்களை வைத்து பால் காய்ச்சியுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்துள்ளனர். தாங்கள் வருவதற்கு முன்பே அங்கு பால் காய்ச்சபடுவதை அறிந்த ஏழுமலை அங்கிருந்த அதிகாரிகளை சகட்டுமேனிக்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலையி லேயே பேசியுள்ளார். மேலும் நான் இருந்து திறக்காத அங்கன்வாடி அன்னமங்கலத்தில் இயங்கக் கூடாது எனக் கூறி, அங்கன்வாடி மையத்தை பூட்டி சாவியை ஏழுமலை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பலமுறை அலுவலர்கள் புதிய அங்கன்வாடி மையத் திற்கு குழந்தைகளை மாற்ற வேண்டி சாவி கேட்டும், இதுநாள் வரை சாவி கிடைக்கவில்லை.இந்த அங்கன்வாடி மையத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட அமைச்சர் சிவி.சண்முகம் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்மலை யனூர் வட்ட செயலாளர் டி.முருகன் கூறுகையில், உடனடியாக அங்கன்வாடி மையத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.