tamilnadu

வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

விருதுநகர், ஜூன் 4- விருதுநகர் மாவட்ட வருவாய் அலு வலராக மங்கள ராமசுப்பிரமணியன்  பொறுப்பேற்றுக் கொண்டார்.  சென்னையில் மண்டல அலுவலராக பொறுப்பு வகித்த மங்கள ராமசுப்பிர மணியன், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றார். இவர் கடந்த 1995-ஆம் ஆண்டு குரூப்- 2 தேர் வில் வெற்றி பெற்று, மதுரை மாவட்டத்தில் வருவாய்த்துறையில் நேரடி நியமன உத வியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று அதே மாவட்டத்தில் 2013-ஆம் ஆண்டு வரை வட்டாட்சியராக வும், திருநெல்வேலி, தேனி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் துணை ஆட்சியர் நிலையில் 2013-ஆம் ஆண்டு  முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலும், விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் வருவாய் கோட் டாட்சியராக 2016-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலும், பெருநகர மாநகராட்சி, சென்னையில் மண்டல அலு வலராக 2018-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலும் பணியாற்றியுள்ளார்.