விழுப்புரம், ஜூன் 14- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செஞ்சியில் உள்ள தனியார் விதை விற்பனை நிலை யங்களில் நெல் விதை வாங்கி நெல் நடவு செய்ய நாற்றங்கால் விதைப்பு செய்திருந்த னர். நடவு நாட்கள் நெருங்கிய நிலையில் நாற்றங்கால் சரிவர முளைப்பு இல்லாததால் நடவு பணி பாதிக்கப்பட்டு விவசாயிகள் பலர் நஷ்டம் அடைந்தனர். இதற்கு காரணம் தர மற்ற விதைகள்தான் என பாதிக்கப்பட்ட விவ சாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டி இருந்தது. இதுகுறித்து கடந்த 10ஆம் தேதி தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதையடுத்து மாவட்ட வேளாண் துறை அதி காரிகள், பாதிக்கப்பட்ட பகுதி மட்டுமல்லா மல், மாவட்டம் முழுவதும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர். விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்கு நர் மல்லிகா, விழுப்புரம் மற்றும் செஞ்சி பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்கள், விதை இருப்பு குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, தனி யார் விதை விற்பனை நிலையங்களில் உள்ள நடப்பு பருவத்திற்கு தேவையான விதை களின் தரம் குறித்து ஆய்வு செய்தார், விதை கொள்முதல் பதிவேடு குறைபாடு மற்றும் விதை பகுப்பாய்வு முடிவுகள் குறைபாடு கார ணமாக விதை சட்டத்தை மீறி செயல்பட்ட தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த கம்பு (3,700 கிலோ) மக்காச்சோளம் (1,320 கிலோ) மற்றும் நெல் (1,500 கிலோ) விதைகளுக்கு விற்பனை செய்ய தடை விதித்தார்.