tamilnadu

img

மாற்றுத்திற னாளிகளுக்கு நூறு நாள் வேலை வழங்கக் கோரி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட முண்டியம்பாக்கம், சிந்தாமணி, ஒரத்தூர்,  அய்யூர்அகரம், கப்பியாம்புலியூர் ஆகிய கிராமங்களில் உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு நூறு நாள் வேலை வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின்  சார்பில் பனையபுரத்தில் உள்ள விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவல கத்தை  மாவட்டப் பொருளாளர் பி.உமா தலைமையில் முற்றுகையிட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் எம். சுப்பராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அனவருக்கும் வேலைக்கான உத்தரவு வழங்குவதாக அதி காரிகள் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

;