விருதுநகர், மே.11- கொரோனா நோய் தொற்றை தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டது. இந்நிலையில் திங்கள் கிழமை முதல் தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி யுள்ளது. அதேநேரத்தில், தேநீர் கடைகளில் பார்சலில் மட்டுமே தேநீர் வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாட் டையும் விதித்தது. இந்தநிலையில், விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட கச்சேரி சாலை, மெயின் பஜார் மற்றும் நகராட்சி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள 4 கடைகளில் சுகாதாரத்துறை யினர் திடீர் சோதனை நடத்தினர். அதில், பார்சலில் தேநீர் வழங்காமல் தனி நபர்களுக்கு கண்ணாடி டம்ள ரில் விற்கப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து 4 கடை உரிமையாளர்களுக்கும் தலா ரூ.100 வீதம் மொத்தம் 400 ரூபாய் அபராதம் விதித்ததோடு, முதல் கட்ட தவறு என்பதால் எச்சரிக்கை விடுத்தனர். இதே தவறை மீண்டும் செய்தால் கடைக்கு பூட்டி சீல் வைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.