விருதுநகர், ஜூன்15- விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றி யத்திற்குட்பட்டது வேண்டுராயபுரம் ஊராட்சி. இங்கு 40-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு 22 வருடங்களுக்கு முன்பு இல வச வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைவரும் தங்களது இடத்தில் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். இதில் பத்து பேருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள் ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கு பட்டா வழங்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி யினர் சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா வை பெற்றுக் கொள்ளுங்கள் என அங்குள்ள அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதை யடுத்து, தங்களுக்கான பட்டாவை உடனடி யாக வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை திங்களன்று வேண்டுரா யுபரம் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவர்களை தனித்தனி மனு அளிக்குமாறு கூறினர். அதை உரிய அதிகாரியிடம் வழங்க வும் ஏற்பாடுசெய்தனர்.