tamilnadu

சாத்தூர் நகர் காவல்நிலையம் மூடப்பட்டது

 சாத்தூர், ஜூலை 20- விருதுநகர் மாவட்டத்தில் சமீப கால மாக கொரோனா தொற்றை கட்டுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள். செவிலியர்கள், காவலர்களுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. சாத்தூரில் ஒரே நாளில் ஆறு காவ லர்கள் மற்றும் செவிலியர் உள்பட 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டு உள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட ஆறு காவலர்கள் பணியாற்றிய சாத்தூர் நகர் காவல் நிலையத்தை சாத்தூர் நக ராட்சி நிர்வாகத்தினர் தற்காலிகமாக மூடி உள்ளனர். மேலும் காவல் நிலையத்திலும் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கபட்டு சுத்தப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்ட னர். ஆறு காவலர்களுடன் உடன் பணியாற் றிய அனைத்து காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.