tamilnadu

நீராதாரங்கள் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு

விழுப்புரம், பிப். 13- விழுப்புரம் மாவட்டத்தில் நீராதாரங்கள் சீரமைப்பு குறித்து தமிழக நீா்வளப் பாதுகாப்பு மற்றும் நதிகள் மறுசீரமைப்புக் கழக இயக்குநா் சத்தியகோபால் ஆய்வு மேற்கொண்டார்.  மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆ.அண்ணா துரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சத்தியகோபால் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை, நீா்வள ஆதாரத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏரி குடிமராமத்து திட்டப் பணிகளின் நிலவரம், நிகழாண்டு புதிதாக நடைபெறவுள்ள குடிமராமத்து திட்டப் பணிகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் ஆக்கிரமிப்பு களை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்தத் திட்டப் பணிகளை குறைகளின்றி தரமாக மேற்கொள்ளவும் அவா் உத்தரவிட்டார். மேலும் தளவானூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய அணைக்கட்டுப் பணிகளையும் அவா் பார்வையிட்டார்.