tamilnadu

img

அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரிக்கை

விழுப்புரம், டிச.1- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி விழுப்புரம் மாவட்டம் மேல்மலைய னூரில் மாநாடு சனிக்கிழமை (நவ. 30) நடை பெற்றது. மாநாட்டிற்கு வட்டத் தலைவர் ஆர்.உதயகுமார் தலைமை தாங்கினார். வட்டக் குழு உறுப்பினர் கே.ரவி வர வேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். மாநாட்டில் அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், எம்.எஸ்.சாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், வேளாண் துறையில் மானிய திட்டங்களை ஊழலின்றி அமல்படுத்த வேண்டும், மின் இணைப்பு கேட்டுள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன. இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், தலைவர் பி.சிவராமன், பொருளாளர் பி.சௌந்தரராஜன், சிபிஎம் வட்டச் செயலாளர் டி.முருகன், தலைவர் வி.சிவன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் குண்டு ரெட்டியார் உட்பட பலர் கலந்து கொண்டனர். வட்டச் செயலாளர் டி.சுரேஷ் நன்றி கூறினார்.