திருச்சுழி, ஜூன் 3- விருதுநகர் மாவட்டம் திருச் சுழி பகுதியில் பழங்குடி மக்கள் வசிக்கும் குடியிருப்பு உள்ளது. இங்கு 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊரடங்கால், எவ்வித வேலைக்கும் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ரூ.65 ஆயிரம் மதிப்பிலரின நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்விற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் ஆகி யோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர். ஒன்றியச் செயலாளர் பி.அன்புச்செல்வன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி. முருகன், எஸ்.லட்சுமி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் என்.உமா மகேஸ்வரி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.