tamilnadu

img

விழுப்புரம் கழுவேலி ஏரி ரூ.161 கோடியில் சீரமைப்பு

விழுப்புரம், மே 28- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கழுவேலி ஏரியில் கடல் நீர்புகுவதைத் தடுத்து, மழை நீரை தேக்குவதற்கான சீர மைப்புப் பணிகள் ரூ. 161 கோடி யில் நடைபெறவுள்ளன. மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரைப் பகுதியில் கழுவேலி ஏரி உள்ளது. இது 10.50 கி.மீ. அக லம், 12.80 கி.மீ. நீளத்தில் 70 சதுர  கி.மீ. நீர்பரப்பு கொண்டது. இந்த  ஏரி 8 கி.மீ. தொலைவு முகதுவா ரத்தின் மூலம் எடையன்திட்டு கழு வேலியில் இணைகிறது. எடை யன்திட்டு கழுவேலி 10 கி.மீ. தொலை வுக்கு விரிந்து, மரக்காணத்தின் வடக்கே கடலுடன் சேர்கிறது. தமிழக அரசு நீராதாரங்களை பாதுகாக்கும் வகையில் ரூ.161 கோடி மதிப்பீட்டில் புதிய கட்ட மைப்பு மூலம் கழுவேலி ஏரியை மீட்டெடுத்து, ஏரியில் நீரைத் தேக்குதல், கடல்நீர் உட்புகுதலை தடுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவுள்ளது. இந்தப் பணிகளை மேற் கொள்வது தொடர்பாக, தமிழ்நாடு நதிநீர் பாதுகாப்பு கழகத் தலை வர் மற்றும் மேலாண் இயக்குநர் சத்யகோபால் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம்  கழுவேலி ஏரியின் அணைக்கட்டு பகுதியில் 3 ஆயிரம் ஏக்கர் பாச னம் பெறும் விவசாய நிலங்களை,  வெள்ளம் ஏற்படும் போது பாது காக்கவும், கடல்நீரை உள்ளே நுழையாமல் தடுத்து, மழைநீரை சேமித்து பாசனத்துக்கு பயன்ப டுத்தும் வகையில் புதிய தடுப்  பணை, புதிய கரை அமைத்து  நிலத்தடி நீர்வளம் மேம்படுத்தப் படவுள்ளது. இதனால் ஊரணி, வண்டிப் பாளையம், ஆத்திக்குப்பம், அனு மந்தை, கூனிமேடு, ஆலப் பாக்கம், கந்தாடு, கொள்ளிமேடு, திருக்கனூர், எம்.புதுப்பாக்கம், நடுக்குப்பம், ஓமிப்பேர், சித்த னப்பாக்கம், நாணகல்மேடு, தேவ நந்தல், காரட்டை, அறுவடை, அட சல் உள்ளிட்ட 18 கிராம விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட வன அலுவலர் அபி ஷேக்தோமர், பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறி யாளர் என்.சுரேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.