tamilnadu

img

மது குடிப்பவர்களின் உயிரைப் பாதுகாக்கவே உடனடி மது விலக்கை கொண்டு வர வில்லையாம்- ராஜேந்திர பாலாஜி புது தகவல்

 

குடிப்பவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகத்தான் உடனடியாக முழு மதுவிலக்கை கொண்டு வரவில்லை என்று அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள அகிலாபுரத்தில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்

''அதிமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. மது குடிப்பவர்கள் உடனே குடிப்பதை நிறுத்தினால், நரம்புத்தளர்ச்சி ஏற்படும். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். மது குடிப்பவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகத்தான், நாங்கள் உடனடியாக முழு மதுவிலக்கையும் கொண்டுவராமல் இருக்கிறோம். படிப்படியாக, மதுவிலக்கைக் கொண்டு வருகிறோம் என்ற இதுவரை அதிமுக அரசு தெரிவிக்காத புது தகவலை தெரிவித்துள்ளார். 

;