விழுப்புரம், ஆக. 31- விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவா்களுக்கு அரசு மருத்துவமனை, அரசு மருத்து வக் கல்லூரி, பெரியாா் நகர் சுகாதார மேம்பாட்டு மைய வளா கம், பிடாகம், பெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதிகள், விக்கிரவாண்டி அரசு மருத்து வமனை, புளிச்சப்பள்ளத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி என 6 சிறப்பு மையங்களில் சிகிச்சையளிக்கப்படு கிறது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்ற புகார் அவ்வப்போது எழுகிறது. விழுப்புரம் அரசு மருத்துவமனை, அரசூா், கப்பியாம்புலியூா் ஆகிய சுகாதார மையங்களில் தரமான உணவு வழங்கப்படவில்லை என ஏற்கெனவே புகார்கள் எழுந்தன. தற்போது, புளிச்சப்பள்ளத்தில் உள்ள தனியாா் கல்லூரி மையம், பெரும்பாக்கம் சித்த மருத்துவ மையம் ஆகிய வற்றில் தரமான சத்தான உணவு வழங்கவில்லை என்று நோயாளிகள் தெரிவிக்கின்றனர். நோயாளிகளுக்கு தினசரி வழங்கப்படும் உணவுகள் தரமானதா என அதிகாரிகள் ஆய்வு செய்து, சத்தான உணவு வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும், உறவினா்கள் மூலம் வெளியி லிருந்து கொண்டுவரப்படும் உணவை அனுமதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.