tamilnadu

சாலை பணி துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியரிடம் மனு

விழுப்புரம்.ஏப்.24-விழுப்புரம் மாவட்டம் தென் ஆலப்பாக்கத்தில் சாலை விரிவாக்கப் பணியை துரிதப்படுத்த வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். திண்டிவனம் அருகே உள்ள தென் ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கொடுத்துள்ள மனுவில், எங்கள் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சாலை விரிவாக்கப்பணி மந்தமாக நடந்து வருகிறது.தென் ஆலப்பாக்கம்-பாதிராப்புலியூர் சாலையின் குறுக்கே நடைபாலம் அமைக்கும் பணியும் மந்தமாக நடக்கிறது. இதேபோன்று, எங்கள் கிராம காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதால் சாலையின் உயரம் அதிகரித்துள்ளது. இதனால், மின் கம்பிகள் தாழ்வாக உள்ளதால், பஸ்கள் செல்ல முடியவில்லை. இந்த மின் கம்பியை உயர்த்தக்கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, சாலைப் பணியை துரிதப்படுத்தவும், மின் கம்பியை உயர்த்தவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறிப்பட்டுள்ளனர்.

;